
எத்தனையோ போதாமைகளுக்கிடையே இந்த வாழ்வு எதை நோக்கி நகர்கிறது என்னும் கேள்விக்கு விடையாக, 'உன்னதம்' என்னும் சொல்லே பரிபூரணமாக வந்து நிற்கிறது. ஆற்று நீரில் தேடலோடு சுழலும் மீன்களைப் போல, 'உன்னதம்'
தேடலின் வடிவில்...
அன்பின் இயல்பில்...
வாழ்வின் சுவாரசியங்களில்...
என இந்தப் பூமியில் எங்கோ பூத்தபடியிருக்கிறது
முடிவிலியாய்.
- அன்றிலன்











