
தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் பல வருடங்களாய் எழுதி வரும் ஆனந்த் ராகவ், சிறுகதைகள், நாடகங்கள், திரைக்கதை என்று பல தளங்களில் இயங்குபவர். எழுபத்து ஐந்து சிறுகதைகள், பத்து நாடகங்கள் எழுதியுள்ளார். ‘நிபுணன்’ மற்றும் ‘ஷாட் பூட் த்ரீ’ திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரைக்கதை வசனகர்த்தாவாகத் திரையுலகிலும் அறிமுகமானவர். இவரது நாடகங்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளில் சென்னை, பெங்களூரு, கோழிக்கோடு, கொச்சியிலும் சான்ஃப்ரான்சிஸ்கோ, நியூஜெர்சி, சியாட்டில், ஹூஸ்டன், ஃபீனிக்ஸ், சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளிலும் நூற்றுக்கும் மேல் மேடையேற்றப்பட்டுள்ளன. இலக்கியச் சிந்தனை அமைப்பின் 2010 ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான விருது பெற்றவர். இதைத் தவிர இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரப் பரிசுகள், விகடன் முத்திரைக்கதைப் பரிசுகள் மற்றும் சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். இந்திய ராமாயணங்களோடு தாய்லாந்து, மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய ராமாயணங்களை ஒப்பிட்டு எழுதிய ‘ராமகியன்’ என்கிற இவரது புத்தகம் குறிப்பிடத்தக்க ஒன்று.











