Swasam
0
Sangam Maruviya Kaalamum | சங்கம் மருவிய காலமும் களப்பிரர் காலமும் (கி.மு.50-கி.பி.575)

Sangam Maruviya Kaalamum Kalappirar Kaalamum (Ki.Mu. 50 – Ki.Pi. 575) | சங்கம் மருவிய காலமும் களப்பிரர் காலமும் (கி.மு.50-கி.பி.575)

2016 ஆம் ஆண்டு வெளிவந்த எமது “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற வரலாற்று ஆய்வுநூல்
பண்டையகாலம் முதல் கி.மு. 50 வரையான பழந்தமிழ்நாட்டின் வரலாற்றை மட்டுமே ஆய்வு செய்து எழுதியுள்ளது. அதன் பிந்தைய சங்கம் மருவிய காலத்தையும் (கி.மு.50 - கி.பி.250), களப்பிரர் காலத்தையும் (கி.பி.250-575) விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் தான் இப்போது வெளிவருகிறது

சங்கம் மருவிய காலம் என்பது கி.மு.50-கி.பி.250 வரையான பேரரசுக் காலகட்டம். அதே காலகட்டத்தில் தான் உரோம் நகரக் குடியரசு (கி.மு.27), பேரரசாக ஆகியது என்பதோடு அதன் மிகச்சிறந்த காலகட்டம் என்பது அகசுடசு முதல் மார்க்கசு அரேலியசு காலம் (கி.பி.180) வரையான சுமார் 200 ஆண்டுகாலகட்டம் (கி.மு.27-கி.பி.180) ஆகும். அக்காலகட்டத்தில்தான் சங்கம் மருவியகாலத் தமிழ்நாடு உரோமுடன் மிக அதிக அளவான வணிகத்தை நடத்திவந்தது. அதனால் தான் இந்தியாவிலேயே மிக அதிக அளவான (90%) உரோம் நாணயங்கள் தமிழ் நாட்டில் கிடைக்கின்றன.

இதே காலகட்டத்தில் (கி.பி.78) தான் எரித்ரேயக் கடலில் பெரிளசு நூலின் கிரேக்கப்பயணி தமிழ்நாடு வந்து திரும்பினார். இதே காலகட்டத்தில்தான் (கி.பி.150) ‘முசிறி-அலெக்சாண்ட்ரியா’ ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேகாலகட்ட இசுட்ராபோ, தாலமி, பிளினி போன்ற உரோம் ஆசிரியர்கள் தமிழ்நாடு குறித்தப் பல விடயங்களைத் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வெளிநாட்டு உள்நாட்டு நூல்களும் பழந்தமிழ்நாடு குறித்து நிறையத் தரவுகளை வழங்குகின்றன. .


₹651.00 ₹700.00
Customize
Publisher
New Century Book House
Genre
History | வரலாறு
Published on
2026
Language
Tamil
Author
Kaniyanbalan | கணியன்பாலன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.