
‘மானுடச் சேட்டை’களை அவதானிப்பதே பொதுவாகத் தி. ஜானகிராமனின் இலக்கிய நோக்கம். அறிந்தும் அறியாமலும் மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையை எடுத்துரைப்பதே அவரது எழுத்தின் இயல்பு. பதினொரு சிறுகதைகளையும் ஒரு குறு நாவலையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பும் தி.ஜா.வின் எழுத்திலக்கணத்தின் சான்று.
சாகித்திய அகாதெமி விருதை 1979இல் தி. ஜானகிராமனுக்குப் பெற்றுத் தந்த தொகுப்பு ‘சக்தி வைத்தியம்.’











