


புகழ்பெற்ற வங்காள எழுத்தாளரான பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆங்கிலத்தில் எழுதிய முக்கியமான நாவல், 'ராஜ்மோகனின் மனைவி'. ஹேமாங்கினி டூ மதங்கினி எனும் இரு சகோதரிகளைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்த யதார்த்தவாத நாவல், காதல், பாசம், பேராசை, வன்மம், துரோகம் என்ற பல உணர்ச்சிகளின் வழியே பயணிக்கிறது.
மனித மனங்களுக்குள் ஏற்படும் உணர்ச்சிகள் மற்றும் பேராசைகள் எவ்வாறு நம்மைச் சேர்ந்தவர்களைப் பாதிக்கின்றன என்பதை ஆழமாகவும் எளிமையாகவும் சொல்கிற நாவல் இது. கதை சொல்லலின் இடையே வெளிப்படும் அங்கதச் சுவை இந்த நாவலில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒன்று.
ஆங்கில மூலநாவலின் சுவை குன்றாமல் வானதி இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.











