
"பிராமணரல்லாதார் இயக்க நோக்கங்கள் பலவற்றில் எனக்கு அனுதாபமுண்டு. சமூக அமைப்பில் பல அநீதிகள் இருந்தன. அவைகளை ஒழிக்க அரசியல் தலைவர்கள் முயலவில்லை; குறைப்பட்டோரை அவர்கள் அலட்சியம் செய்தனர். அரசியல் மூலமன்றி சமூகக் குறைபாடுகளை ஒழிக்க முடியாதெனக் கண்டு டாக்டர் நாயர் பிராமணரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்தார். ஆகவே, இவ்வியக்கத்தினால் அநேக நன்மைகள் உண்டாயிருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இவ்வியக்கத்தினால் விஷயங்களை ஆராய்ந்து பார்க்காதவர்கள் இப்பொழுது பார்க்கிறார்கள்; முன் விளங்காமலிருந்த பல விஷயங்கள் இப்பொழுது தெளிவாக விளங்குகின்றன. எவரையும் வெறுக்குமாறு பிராமணரல்லாதார் கூறவில்லையென திரு. ஜீவரத்தினம் பிள்ளை தெளிவாக விளக்கிக் கூறியதுபற்றி சந்தோஷப்படுகிறேன். முன்னம் நம்மவர்களுக்குள் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க இந்த சந்தர்ப்பம் பெரிதும் உதவி புரியுமென்று நம்புகிறேன்.
-ராஜாஜி











