
எனக்குப் பிடித்த நூறு தமிழ்ச் சிறுகதைகளில் வண்ணநிலவனின் ‘எஸ்தர்' கதைக்கு அடுத்து ஆனந்த் ராகவின் கதையும் உண்டு. - இரா. முருகன் ஆனந்த் ராகவின் கதைகள் வாழ்க்கையின் விநோதமான பக்கங்களை ஒவ்வொன்றாகத் திறந்து நம்முடன் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துகின்றன. ஒவ்வொரு கதையிலும் உரையாடல் பகுதியை கச்சிதமாக வடிவமைத்திருப்பதில் அவர் அடைந்திருக்கும் வெற்றியை வாசகர்கள் எளிதில் கண்டுகொள்ளலாம். சுஜாதாவின் சிறுகதைகளில் கிடைக்கும் சம்பாஷணை சுகங்கள் ஆனந்த் ராகவ் கதைகளில் பரவலாகக் கிடைக்கின்றன. சூழலின் வர்ணனைகள் மிகவும் துல்லியமான பார்வையுடன் எவ்வித பிரயாசையும் இன்றி வந்து விழுகிற சுகத்தை இவர் கதைகளின் ஊடாகப் பயணிக்கும்போது உணரலாம்.
- பென்னேஸ்வரன்











