


மண்ணின் அழுக்கைச் சுமந்து, மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் வலிகளும், தலைமுறை தலைமுறையாக அவர்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகளும் இந்த நாவலில் ரத்தமும் கண்ணீருமாகப் பதிந்திருக்கின்றன.
சாதியப் பாகுபாடுகளைச் சாம்பலாக்கத் துணியும் பெண்களின் எழுச்சியும். மனிதாபிமானத்தின் போராட்டமுமே இந்த நாவல். வீட்டுச் சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்காமல், அநீதிக்கு எதிராகக் களம் காணும் பெண்களின் உலகத்தைக் கண்முன் கொண்டு வருகிறது இந்தப் படைப்பு.
தான் கண்டு கேட்டறிந்தவற்றை மையமாகக் கொண்டு இந்த நாவலைச் செம்மையாகப் படைத்திருக்கிறார் ஜெயந்தி கார்த்திக்.











