


மனமெனும் குதிரையைக் கட்டுப்படுத்தும் கடிவாளம்தான் ஆன்மிகம். ஆன்மிகமும் கோவிலும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது நம் ஆன்றோர் மொழி. கோவில் என்பது வெறும் கட்டடமல்ல; பக்தியின் ஒட்டுமொத்த வடிவம். அத்தகைய பல கோவில்களின் வரலாறு மற்றும் வழிபாடு பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது இந்தப் புத்தகம். சிறப்புமிக்க, அரிய கோவில்களைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம் நம் நாட்டின் தொன்மையான பண்பாட்டையும் மக்களின் உயர்ந்த நாகரிகப் பின்புலத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.











