


பக்தி என்னும் உணர்வுநிலையை விளக்கிச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இறை உணர்வும் அப்படித்தான். அப்படிப்பட்ட இறை உணர்வை மொழி மூலம் இன்னொருவருக்குக் கடத்திவிடுவதன் உச்சமே, அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அனுபூதி.
கந்தர் அனுபூதியை இன்றைய தலைமுறைக்குப் புரியும் வகையில், தற்காலப் பேச்சு மொழியில். எளிமையான விளக்கங்களோடு. ஓர் உரையாடல் போல முன்வைக்கிறது இந்நூல்.
வாழ்க்கையில் ஏற்படும் தடைகளுக்குப் பயந்து. வாழ்க்கைக்கே பயந்து. ஏதேதோ தவறான பாதைகளில் அகப்பட்டு உழலும் தற்கால இளைஞர்களுக்கு, வாழ்க்கை நெறிகளையும் வாழ்வின் உண்மையையும் பக்தியின் முக்கியத்துவத்தையும் அவற்றின்வழி நிகழும் அற்புதங்களையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
கந்தர் அனுபூதி முருகனைப் பற்றியது மட்டுமல்ல; நம் சுயத்தை உணரச் செய்யும் அற்புதப் படைப்பு.











