
இவ்வுலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபியவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டு, படிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வருகிறது. உலக முடிவு நாள் வரையிலும் இது தொடரும்.முஹம்மது நபிபெருமானின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவனாகிவிட வேண்டும் என்ற பேராவாவின் விளவுதான் இந்நூல், அன்னை ஆயிஷா அவர்களின் உண்மையான வயதுபற்றியும், அன்னை சஃபியா, அன்னை மரியம் போன்ற நபிபெருமானின் மனைவிமார்களைப்பற்றியும் ஹஸ்ரத் அபூதாலிப் அவர்களின் ஈமான் பற்றியும் விரிவான தகவல்களை இந்நூலில் கொடுத்துள்ளேன். இந்நூலின் பொருட்டு இறைவன் என் பிழைகளைப் பொறுத்து, என் மண்ணறையை ஒளிமயமாக்குவானாக, ஆமீன்.











