கிரேக்க இலக்கியத்தின் சிகரமான ஹோமரின் 'ஒடிஸி', நவீன வாசகர்களின் வாசிப்புக்கேற்ப எளிமையான நடையில் இந்தப் புத்தகத்தில் புத்துயிர் பெற்றுள்ளது.
இதாகா நாட்டின் மாவீரனான ஒடிஸியஸ், தன் தாயகம் நோக்கிய பயணத்தில் எதிர்கொள்ளும் அதி பயங்கரமான அரக்கர்கள், கடவுள்களின் சாபம். இருபது ஆண்டுக்காலப் பிரிவின் துயரங்கள் உள்ளிட்ட பல உணர்ச்சி அலைகளைக் கொண்ட பெருங்காப்பியத்தைச் சுருக்கமாக விவரிக்கும் படைப்பே இந்தப் புத்தகம்.
மூலத்தின் ஆன்மாவையும் உணர்ச்சிகளையும் துளியும் சிதைக்காமல், அந்தச் செவ்விலக்கியத்தின் சுவை குன்றாமல் சுருங்கக் கொடுத்துள்ளார் ஆசிரியர் அனந்தசாய்ராம் ரங்கராஜன். தாமரை உண்பவர்களின் (lotus eaters) வஞ்சக மாயைகள், தன் கணவன் ஒடிஸியஸுக்காகக் காத்திருக்கும் பெனிலோப்பின் ஏக்கம் என இக்காவியத்தின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் இதில் பதிவு செய்திருக்கிறார்.
காலத்தால் அழியாத ஒரு வரலாற்றுப் பொக்கிஷத்தை விரைவாக உள்வாங்கிக் கொள்ள இந்தக் காவியச் சுருக்கம் பேருதவியாக இருக்கும்.