


திருவண்ணாமலை -சிவபெருமான் ஜோதிப் பிழம்பாய்க் காட்சி தரும் புண்ணியத் தலம். பல யோகிகள், ஞானிகளின் காலடி பட்ட ஞான பூமி. பல நூறு சித்தர்கள் சூட்சுமச் சரீரத்துடன் உலவும் இடம். அம்மையும் அப்பனும் வரமளிக்கும் அருட்கோவில் அமைந்திருக்கும் ஊர்.
திருவண்ணாமலையில் சிவபெருமான் மலையாகவே எழுந்தருளியிருக்கிறார். மலையைச் சுற்றினாலே மகேசனை வலம் வந்தது போலத்தான். ஆம், திருவண்ணாமலையின் ஈடு இணையற்ற சிறப்புகளில் ஒன்று கிரிவலம்.
கிரிவலம் செய்வது தொடர்பான அனைத்து விளக்கங்களையும், கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் சன்னதிகள் மற்றும் ஆசிரமங்களைப் பற்றியும் இந்த நூல் தொகுத்துத் தருகிறது.











