
குழந்தைகளே ஒரு கனவுதான். அவர்கள், கற்பனைக்கு நிகர் இல்லாத ஒரு கனவு. அந்தக் குழந்தைகளுக்குக் கனவு வந்தால்! வியப்பூட்டும் சித்திரங்களோடு புதிரான கதையோடு அந்தக் கனவு வந்திருக்கிறது. ஒரு உலக உண்மையை உணர்த்தும் அற்புதமான இந்தக் கதையைப் படித்து நீங்களும் கனவு காணுங்கள்.
சிறார் கதைசொல்லிகள் புத்தக வரிசையில் நிறைய புதிய குழந்தைகள் பங்கேற்கத் துவங்கி இருக்கிறார்கள். நாம் அறியாத ஏதோவொரு உலகத்திலிருந்து கதைகளை எடுத்துக் கொண்டு குழந்தைகள் வந்தபடி இருக்கிறார்கள். குழந்தைகளே குழந்தைகளை கதைக்குள் உலாவ உற்சாகப்படுத்தும் இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது











