
ஒரு நூலை எழுதியவர் புகழ்பெற்றவரா? அரசியல் தலைவரா? அல்லது அறிஞரா? என்றெல்லாம் காண்பதைவிடவும் நூல் தருகின்ற செய்தி உண்மைகளை உணர்வதற்கு எவ்வகையில் பயன்படுகிறது என்பதுதான் மிக முக்கியம். இதுதான் பௌத்தக் கண்ணோட்டம்.. அந்த வகையில் பௌத்தத்தின் பல்வேறு விதமான தத்துவங்களை மிக எளிமையாக, சுருக்கமாக இந்த நூலில் அப்பாதுரையார் அவர்கள் வழங்கி உள்ளார் என்றால் மிகை இல்லை.
-முனைவர் க. ஜெயபாலன்
தங்கவயல் 'தமிழன்' இதழ் ஆசிரியராகத் தொடர்ந்து பத்தாண்டுகள் எழுதி வந்தார். நந்தன் சரித்திர தந்திரம்' எனும் நூலையும் எழுதியுள்ளார். அதன் பிறகு அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்த நூல் என்றால் அது 'புத்தர் அருளறம் தான், தங்கவயல், பெங்களூர், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பௌத்தர்களிடம் பரவலான கவனத்தைப் பெற்றது. புத்தர் அருளறம்' என்ற பெயர் துரையார் அருளறம்' என்று மக்கள் மனதில் நிலை பெற்றது.
-முனைவர் பெ. விஜயகுமார்











