
என்னால் முன்புபோல நடமாடித் திரிய முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், என்னால் எல்லாவற்றையும் பார்க்கமுடிகிறது, எனது கண்களுக்கு முன் நடக்காதவற்றையுங்கூட. என்னால் எல்லாவற்றையும் கேட்க முடிகிறது, என்னைச் சுற்றியுள்ளவர்களது உதடுகளிலிருந்து உதிராத வார்த்தைகளையுங்கூட...











