
நிஜங்கள் பல நேரங்களில் மேடை வெளிச்சத்தைவிடவும் குரூரமானவை. இந்த நாவல், சமூகத்தின் விளிம்புநிலையில் நின்றுகொண்டு, தங்களின் வாழ்வாதாரத்திற்காக ‘ஆடல் பாடல்’ கலைக்குழுக்களில் இயங்கும் எளிய மனிதர்களின் கதையைப் பேசுகிறது.
இருட்டிலும், வறுமையிலும் உழலும் இவர்களின் வாழ்க்கையில், ஒரு சிறு ஒளிக்கீற்றைத் தேடும் முயற்சியே இந்த ‘ஆடலும் பாடலும்’. கலைக்கும் பிழைப்புக்கும் இடையிலான மெல்லிய கோட்டில் நின்று ஆடும் இவர்களின் வாழ்வியல், வாசிப்பவர்களின் மனசாட்சியை ஒரு கணமாவது உலுக்கும் என்று நம்புகிறேன்.











