
ஒரே நேரத்தில் சிறார் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் எச்சரிக்கை உணர்வையும் ஊட்டுவதாக இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. காலத்தின் தேவையறிந்து சரியான நேரத்தில் எழுதித் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல், சிறார் இலக்கியப் பயணத்தில் ஒரு முக்கியமான துடுப்பசைவாக இருக்கும் என நம்புகிறேன். இலக்கிய உலகத்தில் புழங்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற பலரையும் பிடித்து உலுக்கும் வல்லமை இக்கட்டுரைகளுக்கு இருக்கிறது. விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளார் ஆதி வள்ளியப்பன்.
– எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்











