
இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) கூறினார்கள்: “ஒவ்வொரு நூறு ஆண்டுகளின் முடிவிலும் இந்தச் சமுதாயத்திற்காக அதன் மார்க்கத்தைப் புதுப்பிப்பவரை (முஜத்தித்) அல்லாஹ் எழுப்புவான்” (சுனன் அபூதாவூத் 4291).
இதன் அடிப்படையில் முஸ்லிம் உம்மத்தின் முதல் ‘முஜத்தித்’தாக, இஸ்லாமிய வரலாற்றில் ஓர் ஒளிரும் தாரகையாக விளங்கியவர்தான் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்).











