


இருத்தலே உயிரின் இலக்கு.
எதிர்த்துப் போராடுவதைப் போலவே அச்சப்படுவதற்கும், தப்பி ஓடுவதற்கும் கூட மனிதருக்கு உரிமையுண்டு.
ஐரோப்பிய எல்லையில் எட்டுத் திசைகளும் அடைக்கப்பட்ட பிறகு ஒன்பதாவது திசைக்காகக் காத்திருக்கும் ஓர் அகதியின் கதை இது.
ஈழத்தின் வெம்மைக்கும் உக்ரேனின் உறை குளிருக்கும் இடையில் ஓயாது அல்லாடும் வாழ்க்கைச் சித்திரம்.
இரண்டு யுத்தங்களுக்கும், இரண்டு காதல்களுக்கும் இடையில் நீளும் பயணம்.











