தமிழ்த் திரையுலகையும் இசையையும் பிரிக்கமுடியாது. தமிழ்த்
திரையின் ஆரம்பமே இசைக் கலைஞர்களால் உருவானதுதான்.
அத்தகைய திரை இசைச் சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப்
பதிவு செய்யும் மாபெரும் முயற்சியே இந்தப் புத்தகம்.
நடிப்பிலும் பாட்டிலும் பேர்பெற்ற வசுந்தரா தேவி, சில பாடல்களே
பாடினாலும் சிறந்த பாடல்கள் பாடிய டி.ஏ.மோதி, இசை இணையர்களான
ஏ.வி.ரமணன், உமா ரமணன், இசைக் கலைவாணி வாணி ஜெயராம்,
எக்காலத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கப் போகிற தேன்குரலுக்குச்
சொந்தமான எஸ்.பி.பி உள்ளிட்ட 26 இசைக் கலைஞர்களின் தேனிசைப்
பயணத்தைப் பதிவு செய்கிறது 'திரை இசை அலைகள்' புத்தகத்
தொடரின் ஐந்தாம் பாகமான இப்புத்தகம்.
திரை இசை அலைகளின் ஐந்து பாகங்களும் தமிழ்த் திரை இசை
வரலாற்றை மட்டுமின்றி, ஒட்டுமொத்த திரையுலகின் விரிவான
வரலாற்றையும் இணையாகச் சொல்வது சிறப்பு.