தமிழ்த் திரையுலகையும் இசையையும் பிரிக்கமுடியாது. தமிழ்த்
திரையின் ஆரம்பமே இசைக் கலைஞர்களால் உருவானதுதான்.
அத்தகைய திரை இசைச் சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப்
பதிவு செய்யும் மாபெரும் முயற்சியே இந்தப் புத்தகம்.
பேசும்பட யுகத்தில் தொடங்கி தமிழ் சினிமா இசை தொழில்நுட்பத்தில்
உயர்ந்த காலம் வரையிலான தமிழ்த் திரை இசையின் இனிமையான
வரலாற்றைப் பதிவுசெய்யும் தொடரின் நான்காம் பாகமான
இப்புத்தகத்தில், டி.பி.ராஜலட்சுமி, டி.ஏ.மதுரம், ஜி.என்.பி, கண்டசாலா,
விஜயபாஸ்கர், சலில் சௌத்ரி, சங்கர்-கணேஷ் என இசையில் பல
புதுமைகள் நிகழ்த்திய இசைக்கலைஞர்கள் குறித்துப் பதிவு செய்கிறார்
வாமனன்.
குறிப்பாக, 1992ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி
உலகப்புகழ் பெற்று ஆஸ்கார் பரிசை வென்று, இசையில் ஒரு புதிய
அத்தியாயம் படைத்த ஏ.ஆர். ரஹ்மானின் அசாத்தியத் திரையிசை
பயணத்தைப் பதிவு செய்வதன் மூலம் இப்புத்தகம் இவ்வரிசை சார்ந்த
நூல்களில் தனி முத்திரை பதிக்கிறது.