தமிழ்த் திரையுலகையும் இசையையும் பிரிக்கமுடியாது. தமிழ்த் திரையின்
ஆரம்பமே இசைக் கலைஞர்களால் உருவானதுதான். அத்தகைய திரை
இசைச் சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும்
மாபெரும் முயற்சியே இந்தப் புத்தகம்.
'திரை இசை அலைகள்' தொகுதியின் முதல் பாகமான இந்தப் புத்தகத்தில்
தியாகராஜ பாகவதர் தொடங்கி பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள்.
சி.எஸ்.ஜெயராமன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்
- ராமமூர்த்தி எனப் பெரும் இசை ஆளுமைகள் குறித்தும், அவர்களது
சிறந்த பாடல்களைக் குறிப்பிட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தக் காலத்தின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களான
டி.எம்.சௌந்தரராஜன், ஏ.எம்.ராஜா, பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி என 42
திரை இசைக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் அவர்களது
பாடல்களையும், அவர்கள் பணியாற்றிய திரைப்படங்கள் குறித்த
தகவல்களையும், பல முக்கியமான, அரிய செய்திகளையும் இந்தப் புத்தகம்
சுவையுடன் பதிவு செய்கிறது.
இசை ஆர்வலர்களுக்கும் திரைப்பட ரசிகர்களுக்கும்
திரைத்துறையினருக்கும் இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம் மட்டுமல்ல.
பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமும் கூட.