


அரும்பத் தொடங்கிய ஓர் இளைஞனின் வாழ்க்கை மதுவால் சீரழிவதைத் தேறல் நாவல் சித்திரிக்கிறது. கண் முன்னே தான் கண்ட நண்பனின் வாழ்க்கை அவலத்தைச் சித்திரிப்பதில் ஆசிரியர் காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. மதுவிற்கு அடிமைப்படும் மனிதனின் மனநிலையின் பல்வேறு காட்சிகள் நம்மைக் கலங்கடிக்கின்றன. வாசகனுக்குப் பொழுதைப் போக்கும் படைப்பாக இந்நூல் அமையாது. சமுதாய அவலத்தின்பால் சாதாரண மனிதனின் கவனத்தைத் திருப்பும் எச்சரிக்கை மணியாகத் தேறல் உருவாகியிருக்கிறது.
-தஞ்சாவூர்க் கவிராயர்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்











