
{65} (நபியே! இவர்களிடம்) கூறும்: ‘நான் எச்சரிக்கை செய்பவன் ஆவேன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் ஏகன்; அடக்கியாள்பவன்; {66} மேலும் வானங்கள் மற்றும் பூமி இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்தின் அதிபதி; வலிமை மிக்கவன்; பெரிதும் பிழைபொறுப்பவன்.’ {67} இவர்களிடம் கூறும்: ‘இது ஒரு மாபெரும் செய்தி! {68} நீங்களோ இதனை(ச் செவியேற்றும்) புறக்கணிக்கின்றீர்களே!’
-(திருக்குர்ஆன் 38 : 65-68)











