
நீல மலைகளின் உச்சியில் யாரும் அறியாத ரகசியம் ஒன்று தனித்திருக்கிறது. அச்சமும் மூட நம்பிக்கைகளும் மனிதர்கள் மலையேறிச் செல்லுதலைத் தடுத்து வைத்திருக்கின்றன. கலியுகம் கனிந்தபோது மக்கள் மனம் மாறுகிறது. அச்சம் சற்றுத் தணிகிறது. மாயை, மமதை, அதிகாரம், பேராசை, மதம் என்ற ஐந்து சக்திகளின் பிரதிநிதிகள் நீலமலைக்கு ஏறிவருகிறார்கள். அவர்களின் பயணத்தையும் மகத்தான அந்த நீலக்கனாவினையும் பின்தொடர்கிறது இந்த நாவல். அவர்களின் கனவு பலித்ததா? மலையில் தனித்திருந்த அந்த ரகசியம் என்ன?
நீலகிரி மலைகளில் பிரிட்டிஷ் தங்கள் இருப்பைத் தேடத் தொடங்கிய காலகட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்ட ஓர் அமானுஷ்யக் கற்பனை இந்த நாவல். தமிழ் ஃபேண்டஸி ஃபிக்ஷன் நாவல்களில் தனித்துவமான கதையும், நடையும் சேர்த்துக் கட்டப்பட்டது.











