
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும், தன் பிறப்பின் மேன்மையை உணரவேண்டும்.நாம் ஆறறிவு உடையவர்கள் என்பதை உணர்ந்து, எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்துப் பார்த்துச் செயல்பட முனைய வேண்டும்.
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ந்துவரும் இந்நாளில், தமிழர்கள் மற்ற இனத்தவரைக் காட்டிலும், அத்துறையில் பின்தங்கிய நிலையில் உள்ளதை ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இவ்வாறு நாம் பின்தங்கி இருக்கக் காரணம் என்ன? இதனை ஆய்ந்து உரைத்து, நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.











