
உலகப் பறவைகளின் ஓசை எல்லாம் காதலிகளின் சம்மத ஒலிதானோ? என்ற நினைப்பில் பறவைகளைக் காதலிப்பது, குழந்தையின் காலில் முள் குத்தியதற்காக எல்லா முட்களின் நுனிகளையும் பூவின் இதழ்களாய் மாற்றி வைப்பது, காலிபாட்டில் பொறுக்கும் மனிதர்களின் நிசப்தத்தில் புத்தனைப் பார்ப்பது என்றபடியாக எழுத்தில் சஞ்சரித்து லயிக்கும் கார்த்திகேயன் மாகாவின் கவிதைகள் யவனிகா ஸ்ரீராம் சொன்னதைப்போல ‘சாகசமான காதலின் ருசி கொண்டவை’. மாய எதார்த்தத்தை நிலத்தின் வழியே மீட்டெடுக்கின்றன மாகாவின் கவிதைகள்.











