


ஒரு கண் நோய் தரும், மற்றொன்று நோய் தீர்க்கும். எக்கண் எதுவென்பது அவரவரின் அனுபவம் சார்ந்தது.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
நெடிய பயணிப்பில் கண்டடைதலின் களிப்பு குறுகியதிலும் உண்டு. குறுங்கதைகள் வாசிப்பில் உணர்வெழுச்சி கொள்ளச் செய்தன. இவ்வடிவை தேர்வுகொள்ள வேண்டியதாகிவிட்டது.
காற்றுக் குடுவையினுள் இருக்கும் கதைகள் உங்களுள் குடிகொள்ளும் நம்பிக்கையுள்ளது. வாசியுங்கள்.....
-ந.பெரியசாமி











