


‘தமிழையும், உன் கிரியேட்டிவ் திறமையையும் விட்டுவிடாதே, கதைகள் எழுதேன்’என்றேன். கடந்த சில வருடங்களாகதான் எழுதத் துவங்கியிருக்கிறாள். கட்டுரைகள், பேட்டிகளில் துவங்கி சிறுகதைகளில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்.
இவை என் மகள் எழுதிய கதைகள் என்கிற இதமான இயல்பான சலுகை மனதை ஓரமாக வைத்துவிட்டு ஒரு ‘யாரோ’ எழுத்தாளரின் படைப்புகளாகக் கருதிக்கொண்டு 14 சிறுகதைகளையும் வாசித்தேன். அப்பாடா, பெயர் காப்பாற்றப்பட்டுவிட்டது என்கிற முதல் பெருமூச்சை வெளியேற்றினேன். இந்த 14 சிறுகதைகளிலும் அமைந்துள்ள சிறப்பான விஷயங்களாக நான் பார்ப்பவை: முதலில் வாசிக்க வைக்கும் தன்மை! சுலபமாக வாசிக்க முடிகிற சிக்கலற்ற எளிமையான வாக்கியங்கள்! ட்ரெண்டியான ரசனையான வர்ணனைகள்! இயல்பான அர்த்தமுள்ள வசனங்கள்!
- எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்











