
இஸ்லாம் வருவதற்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்தது, மனித குலம் எந்த மாதிரியான வாழ்வியல் கட்டமைப்பின் கீழ் வாழ்ந்தார்கள், அன்றைய மக்களிடம் எந்த மாதிரியான தீமைகள் புரையோடி போய் கிடந்தன, அன்றைய ஆட்சியாளர்கள், மன்னர்கள் மக்களை எந்த அளவு சுரண்டி அடக்கி ஒடுக்கி அடிமைத்தனமாக வைத்திருந்தார்கள், கடவுள் என்று எதையெல்லாம் மக்கள் வணங்கினார்கள்? மதத்தின் பெயரால், மன்னரின் பெயரால் எவ்வளவு பெரிய அடக்குமுறைகளும் தீண்டாமைகளும் தலைவிரித்து ஆடின. சாதியப் பெருமைகளும், பெண்களை மதிக்காத குணமும் எவ்வளவு வேரூன்றி இருந்தன என்று நீங்கள் பார்க்க வேண்டும்.
பிறகு இஸ்லாம் இந்த உலகிற்கு வந்தவுடன் மனித குலம் அடைந்த நன்மைகள், அருட்கொடைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே இஸ்லாம் மகத்தான அருட்கொடை களை இந்த உலகிற்கு வழங்கி மாபெரும் புரட்சியையே ஏற்படுத்தி இருக்கிறது என்ற உண்மை புரிய வரும்.











