
* ஏன் மக்காவில் போய்தான் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டுமா?
* அங்கே உள்ள கறுப்புக் கல்லை ஏன் முத்தமிடுகிறீர்கள்? அவை மூடநம்பிக்கை இல்லையா?
* இறைவன் கருணை உள்ளவன் என்று சொல்கிறீர்கள். இறைவனை திருப்திப்படுத்த அநியாயமாக ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடலாமா?
* இதர மத நண்பர்களை ஏன் மக்காவில் உள்ள கஅபாவில் அனுமதிப்பதில்லை?
* ஏன் மேற்குத் திசையை நோக்கி முஸ்லிம்கள் வழிபடுகிறீர்கள்?
இவ்வாறாக தங்கள் மனத்துக்குள் கேள்விகளை அடுக்கடுக்காக வைத்திருக்கும் சகோதர சமயத்தவர்களுக்கு விடை கூறும் வகையில் இந்த நூல் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
இந்த நூலை நீங்கள் வாசிக்கும் பொழுது நீங்கள் இதுவரை புரிந்து வைத்திருந்த ஹஜ் குறித்த புரிதலுக்கும், இந்த நூலைப் படித்து முடித்ததும் ஹஜ் குறித்து உங்களுக்கு ஏற்பட்டுள்ள புரிதலுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்துகொள்வீர்கள்.











