பெற்றோர்கள் அனைவருக்குமே தங்களது குழந்தைகள் குறிப்பிட்ட துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எத்தனை பெற்றோர்கள் தம் குழந்தைகளின் ஆசை என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்?பெற்றோர்கள் அனைவருக்குமே தங்களது குழந்தைகள் குறிப்பிட்ட துறையில் சாதிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எத்தனை பெற்றோர்கள் தம் குழந்தைகளின் ஆசை என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்?
ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்திறமையுடனே பிறக்கிறது. அதனை அந்தக் குழந்தைக்கு அடையாளம் காட்டுபவர்கள்தான் உண்மையான பெற்றோர்கள்.
குழந்தைகள் வளர வளர அவர்களது மனதில் மற்றும் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துவது பெற்றோர்களின் கடமை.
குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலானது. அதை உளவியல்ரீதியாகவும் நடைமுறை வாழ்க்கை சார்ந்தும் சிறந்த உதாரணங்களோடும் எளிமையான விளக்கங்களோடும் இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர் நா.கோபாலகிருஷ்ணன்.