
இது. ஆங்கிலத்தில் பல பாகங்களாக, பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. எனினும், அவற்றில் ஒரே சம்பவத்தைத் திருப்பித் திருப்பிக் கூறப்பட்டிருப்பதாக இக்காலத்திய மேல்நாட்டு ஆசிரியர்கள் பலர் கருதுகின்றார்கள். உண்மையும் அதுதான்! பிற்காலத்தில் பதிப்புகள் பல இக்காலத்துக்கேற்றவாறு வெளி வந்துள்ளன.
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் பழம் பெருங் காவியங்கள் என்றாலும் அவற்றின் பழங்கால நடையின் காரணமாக, இக்கால வாசகர்கள் விரும்பிப் படிப்பதில்லை. ஆகவே, ராஜாஜி அவர்கள் இக்கால வாசகர்கள் விரும்பும் வண்ணம், அந்தக் காவியங்களுக்குப் புது மெருகு கொடுத்தார்கள். அதனால், லட்சக்கணக்கானவர்கள் அவற்றைப் படித்துப் பயனடைந்தார்கள்.
அதைப் பின்பற்றியே இந்தக் கதைத் தொகுதியைத் தொகுக்க முற்பட்டேன். மூலக்கதைகளில் உள்ள சம்பவங்கள் எதையும் விட்டு விடாமல். அவசியமற்ற வர்ணனைகளை மட்டுமே நீக்கியுள்ளேன். எனவே, இந்நூல் வாசகர்களுக்குச் சலிப்புத் தோன்றாமலும், விரும்பிப் படிக்கும் விதத்திலும் இருக்கும் என்பது என் நம்பிக்கை.











