
நபிகளாரின் தூதுத்துவப் பணிக்குக் கடும் எதிர்ப்புகள் அதிகமாகியிருந்த காலத்தில் இறைமறுப்பாளர்களுக்கு கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த அத்தியாயத்தின் வசனங்கள் இறக்கி அருளப்பட்டுள்ளன.
இந்த காலகட்டத்தில், மக்காவில் இறை நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பினும் வெகு விரைவில் நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையை இந்த அத்தியாயம் விதைக்கிறது.











