
பொதுமனதில் பதிந்துள்ள விழுமியங்கள் பற்றியும் சாதியச் சமூகத்தின் தனித்த இயல்புகள் குறித்தும் இக்கட்டுரைகள் பெரிதும் பேசுகின்றன. சட்டம், தீர்ப்புகள் மட்டுமல்லாமல் பொதுப்புத்தி சார்ந்தும் சாதியத்தைத் தொடர்புபடுத்தியும் கருத்துரிமைப் பிரச்சினைகளை விவாதிக்கும் இந்நூல் கவனத்திற்கும் வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரியது.











