


ஆல்ஃபா அப்பா ஒமேகா அம்மா என்ற வித்தியாசமான தலைப்புடன் வந்திருக்கும் இந்தப் புத்தகம், இதன் உள்ளடக்கத்திலும் வித்தியாசமான ஒன்றே. தமிழ்ச் சமூகத்துக்கு மிக முக்கியமான புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார் நியாண்டர் செல்வன்.ஆண்மை என்ற சொல்லும் பெண்மை என்ற சொல்லும் இன்று பொருளை இழந்து நிற்கின்றன. இன்றைய உலகில் பதின்ம வயதுச் சிறுவர்களுக்கு எதைச் சொல்லித் தருவது. எப்படிச் சொல்லித் தருவது என்பது பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. அறிவுரை சொல்லி வளர்க்க வேண்டிய ஆசிரியர்களோ குழம்பிப் போய் நிற்கிறார்கள்.தாங்கள் நம்பும் வாழ்க்கைக் கோட்பாடுகளைத் தங்கள் பிள்ளைகளிடம் புகுத்துவதா அல்லது இன்றைய நவீனக் கோட்பாடுகளைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதா என்ற கேள்விக்கு இன்று யாரிடமும் பதிலில்லை.











