


மனத்தின் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும் வரலாற்றின் சுவடுகளைக் கற்பனைத் தூரிகை கொண்டு உயிர்ப்பிக்கும் அழகிய படைப்பு இந்தக் குறுநாவல் தொகுப்பு.
காலத்தின் திரையை விலக்கி, நம் முன்னோர்களின் வீரத்தையும் காதலையும் தியாகத்தையும் இன்றைய வாசகர்களின் மனத்திற்கும் ரசனைக்கும் நெருக்கமாகக் கொண்டுசேர்க்கும் ஒரு காலப்பயணம் இது.
வரலாறு என்பது வெறும் தகவல்கள் அல்ல, அது உணர்வுகளின் சங்கமம் என்பதைப் பறைசாற்றும் இக்கதைகள், உங்களை அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
தமிழக வரலாற்றின் பொன்னேடுகளில் மறைந்திருக்கும் உண்மைச் சம்பவங்களை அவற்றின் அடிப்படை மாறாமல். அதே சமயம் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறார் எழுத்தாளர் சின்னக் கண்ணன்.











